பக்கங்கள்


பத்தாம்வகுப்பு பொது தேர்வில் வெற்றிபெற்றமாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில்<><>வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களை கடனிலும், வறுமையிலும் ஆழ்த்தி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37)

திங்கள், 17 பிப்ரவரி, 2014

மருத்துவ உதவி வேண்டிய சகோதரருக்கு உதவி செய்ய கோரிக்கை: EPMA செயளாலர் வேண்டுகோள்


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

நமதூரைச் சேர்ந்த சகோதரர் உமர் அலி அவர்களின் மகன் ரஹ்மத்துல்லா (ஆட்டோ ஓட்டுனர்) அவர்களுக்கு இரு முறை நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார். அவரை சோதித்த மருத்துவர்கள் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர். 

திங்கள், 3 பிப்ரவரி, 2014

EPMA நிர்வாகிகள் தாசின் அறக்கட்டளை நிறுவனர் ஜனாப்.தாசின் அவர்களுடன் சந்திப்பு

EPMA நிர்வாகிகள் தாசின் அறக்கட்டளை நிறுவனர் ஜனாப்.தாசின் அவர்களுடன் சந்திப்பு


தாசின் அறக்கட்டளை நிறுவனர் ஜனாப். தாசின் அவர்கள் நமதூர் பள்ளிகளின் கெளரவ கல்வி குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுள்ளார். அதற்காக அவரை கண்ணியப்படுத்தும் விதமாகவும் அவரது பணிகள் சிறக்க உற்சாகப்படுத்தும் விதமாகவும் EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் நிர்வாகிகள் கடந்த வெள்ளிக்கிழமை(31/01/2014) அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

எமிரேட்ஸ் புதுவலசை முஸ்லிம் அசோசியேசன் (EPMA) - புதிய நிரிவாகிகள் தேர்வு


நமதூர் எமிரேட்ஸ் புதுவலசை முஸ்லிம் சங்கத்தின் (EPMA) கூட்டம் துபாயில் உள்ள ஜபீல் பார்க்கில் 03.01.2014 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் தலைவர் சகோ. ஜபருல்லா கான் அவர்களது தலைமையில் துவங்கியது. செயலாளர் சகோ. ஜாபிர் ஹுஸைன் அவர்கள் துவக்க உரையாற்றினார். அதில் தொடர்ச்சியாக சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக EPMA-வின் சார்பாக நமதூர் மக்களுக்கு செய்துவரும் உதவிகளையும், இனிவரும் காலங்களில் நாம் செய்யவேண்டிய பணிகளையும் பற்றி விளக்கினார்.

திங்கள், 1 ஜூலை, 2013

30/6/2013 புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில்

30/6/2013 புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் சிறப்பான பரிசளிப்பு விழா நமதூர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. கடந்த 13 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் மூலமாக பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வருடம் EPMA அமைப்புடன், தாசின் அறக்கட்டளையும் மற்றும் நமதூர் முஸ்லிம் தர்ப பரிபால சபையும் இணைந்து முப்பெரும் விழாவாக வெகு விமர்செய்யாக பரிசளிப்பு விழா நடைபெற்றது.



பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா


30/6/2013


புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் சிறப்பான பரிசளிப்பு விழா நமதூர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. கடந்த 13 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் மூலமாக பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வருடம்  EPMA அமைப்புடன், தாசின் அறக்கட்டளையும் மற்றும் நமதூர் முஸ்லிம் தர்ப பரிபால சபையும் இணைந்து முப்பெரும் விழாவாக வெகு விமர்செய்யாக பரிசளிப்பு விழா நடைபெற்றது.





வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

"EPMA நண்பர்கள்.


 'அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)"


"வட்டார விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக தொடங்க உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்."
குறிப்பாக

"தாசின் ட்ரஸ்ட் நிர்வாகிகள்.  

"Dr .சாதிக் அலி, அவர்கள். 

"A.ஆதம் முஹம்மத், அவர்கள். 

"EPMA நண்பர்கள்.

"இப்திஹார்  நஹீம் , அவர்கள்.
(எனக்கு தெரிந்தவர்களை மட்டுமே குறிப்பிட்டு உள்ளேன்) மற்ற உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

                         *****                                            *****                                     *****                                            *****

"EPMA  புதுவலசை மக்களால் U.A.E-  ல் செயல் படும் அமைப்பு. ஊரை சேர்ந்த அனைவரும் உறுப்பினரே, ஊருக்காக மட்டுமே உதவிகள் செயப் படுகிறது. இதற்காக தனியாக உறுப்பினர் சேர்கை படிவம் தேவையில்லை!.

"சம்பந்தப் பட்டநபர்களிடம் இந்த அமைப்பில் நீங்கள் இணைகின்றிர்களா? என்று கேட்கவேண்டிய அவசியமும்  எழவில்லை." அனைவரும் ஊரை சேர்ந்தவர்களே அவர்களுக்கும் உரிமை உள்ளது ஊருக்கு செய்யும் நல்ல விசயங்களில் பங்குகொள்ள.
"நல்லவிசயங்களில் கலந்து கொள்ளாதிருப்பது துரதிர்ஷ்டமானது."

" தனியாக, ஒரே நபராக உதவிகள் செய்ய கூடியே, செய்து கொண்டும். உள்ள எத்தனையோ நல்ல உள்ளங்கள்." அமைப்பு என்று வரும்போது ஒதுங்குவது இல்லை.
அதிலும் என்னுடைய  பங்கு இருக்கவேண்டும் என்று பங்கெடுத்துக்கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.
"தனியாக செய்வதையும், அமைப்பின் மூலமாக செய்யப்படுவதையும்," போட்டு குழப்பி கொள்வதில்லை.
"மிக தெளிவான எண்ணங்கள், புரிதல்கள்."

"இந்தாண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசு."

"வட்டார விளையாட்டுப்போட்டிக்கு நிதி."

"எந்த வருடமும் இல்லாத அளவிற்கு  ஃபித்ரா இந்த வருடம் மிக அதிகமாக epma சார்பாக  கொடுக்க பட்டு உள்ளது."

"இது அனைத்தும் உங்கள் ஆதரவளே  நண்பர்களே"

தொடர்ந்து உங்கள் ஆதரவும், வழிகாட்டல்களும்,தொடரட்டும் EPMA வுக்கு. 

                                                          இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்