பக்கங்கள்


பத்தாம்வகுப்பு பொது தேர்வில் வெற்றிபெற்றமாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில்<><>வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களை கடனிலும், வறுமையிலும் ஆழ்த்தி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37)

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம்


நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம்

Monday , 14th November 2011 03:41:04 PM
உலக நீரிழிவு தினம்
நீரிழிவாளர்கள் எத்தகைய உணவை உண்ண வேண்டும்? எவ்வளவு உண்ண வேண்டும்? இவைதான் நீரிழிவாளவர்கள் அறிய விரும்புகிற முக்கிய விடயமாக இருக்கிறது.

நீரிழிவு தினத்தைக் கொண்டாடுகிற நவம்பர் 2011 ஆன இன்றைய நிலையில் நீரிழிவாளர்களுக்கு எனத் தனியான உணவுத் திட்டம் என எதுவுமே கிடையாது எனச் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படவீர்கள். ஆனால் அதுதான் உண்மை.
காலாவதியான கருத்து
“நீரிழிவாளர்கள் சீனி சேர்க்கக் கூடாது. சோறைத் தவிர்க்க வேண்டும். அரிசி கோதுமை ஆகிய மாப் பொருள்களால் செய்யப்படும் இடியப்பம், பிட்டு, இப்பம், நாடில்ஸ் போன்ற சிற்றுண்டிகளை குறைந்தளவே உண்ண வேண்டும்” என்பதே பெரும்பாலான நோயாளர்களின் எண்ணமாக இருக்கிறது.
பல மருந்துவர்களும் இதையே நோயாளர்களுக்கு ஆலோசனையாகக் கூறுகிறார்கள்.
தற்போதைய கருத்து
இப்பொழுது உலகளாவிய ரீதியில் மருத்துவர்களாலும், உலக சுகாதார ஸ்தாபனம் போன்றவற்றாலும் சிபார்சு செய்யப்படும் உணவுமுறை என்ன சொல்கிறது?
  • கொழுப்பு, சீனி, உப்பு ஆகியன குறைந்தளவும்
  • பழங்களும் காய்கறிகளும் அதிகம் கொண்டதுமான
  • ஆரோக்கியமான சமவலுவுள்ள (balanced) உணவையே ஆகும்.
  • எதையும் முற்றாகத் தவிர்க்கச் சொல்லவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

கொழுப்பு என்றால் என்ன? எண்ணெய், பட்டர், மார்ஜரின் போன்ற அனைத்துக் பொருள்களும், அவை சார்ந்த உணவுகளாகும். சீனி கூடத் தவிர்க்ப்படவேண்டும் என்று சொல்லப்படவில்லை. ஆனால் அவற்றை உணர்வுபூர்வமாக அணுகாது, புத்திபூர்வமாக அளவோடு உணவில் சேர்க்கலாம்.
பொதுவான ஏனைய ஆலேசனைகள் என்ன?
  • உணவில் மாப்பொருள் உணவு பெரும்பகுதியாக இருக்க வேண்டும்.
  • மாப்பொருள் உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது கிளைசீமிக் இன்டெக்ஸ் (Low GI ) குறைவான உணவுகள் முக்கிய இடம் பெறுவது நல்லது. கிளைசீமிக் இன்டெக்ஸ் என்பது குறிப்பிட்டளவு ஒரு உணவை தனியாக உண்ணும்போது சீனியின் அளவு எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை பற்றிய ஒரு கணக்கீடு ஆகும்.
  • கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமுள்ள உணவுவகைளைத் தவிர்க்கவும். அதிலும் முக்கியமாக பிரதான உணவுகளுக்கு இடையேயான குறுந்தினிகளுக்கு தவிர்ப்து நல்லது. அவற்றிற்குப் பதிலாக ஒரு பழம் சாப்பிடலாமே.
  • காலை உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம்.
  • உணவுகளை வேளைக்கு வேளை சாப்பிட வேண்டும். உணவுகளைத் தப்ப விடுவது கூடாது. விரதம் இருப்பது கூடாது.
  • எண்ணெய், நெய், பட்டர், மார்ஜரின் போன்றவற்றை உண்பதில் அவதானம் தேவை. ஹைரஸன் ஏற்றப்பட்ட மார்ஜரின் வகைகள் கூடாது. ஒலிவ் ஓயில், சூரியகாந்தி எண்ணெய், சோள எண்ணெய், நல்லெண்ணய் போன்றவை நல்லது, ஆயினும் தேங்காய் எண்ணெய், பாம் எண்ணெய் தவிர்க்பட்ட வேண்டியது அல்ல. அளவோடு உண்ணலாம்.
  • ஒரு முறை பொரித்த எண்ணெயை வீசிவிட வேண்டும். மீண்டும் மீண்டும் அதே எண்ணெயை உபயேபகிக்கக் கூடாது.
  • பால் அருந்தும்போது கொழுப்பு குறைந்த அளவுள்ள பாலைத் தேர்ந்தெடுங்கள். யோகர்ட் போன்றவற்றை உண்ணும்போதும் அவ்வாறே குறைந்த கொழுப்புள்ளதையே தேர்ந்தெடுக்கவும்.
  • பொரித்த, பேக் பண்ணப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.
  • துரித உணவுகளைத் (Fast food)தவிருங்கள். கட்லட், ரோல்ஸ், பிட்ஸா, சமோசா, ஹம்பேகர், பிரன்ஸ் ப்ரை, பிஸ்கற், வடை, சூசியம்,  சொக்லற் ஷேக், வனிலா ஷேக் போன்ற பலவும் அடங்கும்.
  • இறைச்சியைத் தேர்ந்தெடுக்கும்போது கொழுப்பு குறைந்தவற்றையே உண்ணுங்கள். ஆடு, மாடு, பன்றி போனற்வற்றிக்கு பதிலாக கோழி உண்ணலாம். அதிலும் கொழுப்புள்ள பகுதியை நீக்குங்கள்.
  • மதுபானம் அதிகம் கூடாது. இனிப்புள்ள மென் பானங்கள் கூடாது. ஆனால் போதிய நீராகாரம் எடுங்கள்.
இக் கட்டுரைக்கான  தரவுகள் பிரித்தானிய சுகாதார சேவையினரின் பரிந்துரையை ஆதாரமாகக் கொண்டதாகும்.

சிறுநீரக கற்களை கரைக்கும் வெங்காயம்


சிறுநீரக கற்களை கரைக்கும் வெங்காயம்

Monday , 30th May 2011 07:25:32 AM
search
சிறுநீரக கற்களை கரைக்கும் வெங்காயம், வெங்காயத்தின் காரத்தன்மைக்கு அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணையே காரணம். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப்பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அற்த கற்கள் கரைந்துவிடும். முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணையையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்து விடும்.

செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சீதோஷண நிலை மாறும் போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும். புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புபைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள, செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.

இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும். வெங்காயச்சாற்றையும், வெந்நீரையும் கலந்த வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர வல்வலி, ஈறுவலி குறையும். அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச்சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

சனி, 17 டிசம்பர், 2011

இந்தியா வென்று விட்டது : இனி ரெண்டு நாளைக்கு – முடியல…


இந்தியா வென்று விட்டது : இனி ரெண்டு நாளைக்கு – முடியல……….


உண்மைதான். இவ்வனுபவத்தினை அனேகமான மத்திய கிழக்கில் பணிபுரியும் நண்பர்கள் பெற்றிருப்பீர்கள் என நம்புகின்றேன்.

நான் பணிபுரியும் அலுவலகத்திலும் இந்திய நண்பர்கள் பலர் பணிபுரிகின்றனர். பெரும்பான்மையான நண்பர்களுக்கு – நட்பு என்பது கிரிக்கட் இல்லாத வேளைகளில் மட்டும் என்பது போல எனக்குத்தோன்றும். இந்தியா தோற்று விட்டால், ஏதோ கப்பல் கவிழ்ந்த மாதிரி மூஞ்சி விடியவே விடியாது.அதிலும் இலங்கையுடன் தோற்று விட்டதா? கிழிஞ்சது போ………… ஏதோ பரம விரோதிய பார்ப்பது போல பார்ப்பர்.

“ டேய் அவன் வெண்டா, தோற்றா நான் என்னடா செய்ற வெண்ண..” என கத்த வேண்டும் போல இருக்கும். ம்ம் .. காலக்கொடுமை.. வேற என்னத்த சொல்ற…
“ஏண்டா இப்பிடி இருக்கீங்க” என பரிதாபப்பட்டுக்கொள்வேன்.

எனது நாட்டினரின் நிலை வேறாக இருக்கும். “ இண்டைக்கு இலங்கை தோற்றுவிட்ட்து” என்றால், என்ன மாட்ச் எங்கே நடக்குது என்பர், இவ்வளதுதான் எம்மவர்களின் கிரிக்கட் பற்றிய ஆர்வம். இதையும் விட மிஞ்சி மிஞ்சிப்போனால் – யார் யார் எத்தனை ரன், விக்கட் எனபன பற்றியுடன் முடிந்து விடும்,

தற்போது நடந்து கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப்போட்டியின் முதல் போட்டிக்கு அடுத்த நாள் அதாவது நேற்று, எங்கள் அலுவலகம் – ஒரு மரண வீடு போல இருந்தது. எனது இந்திய சக பாடிகள் முகம் விடியவில்லை. சிம்பாவேவுடன் இந்தியா தோற்றுவிட்ட்து. இந்திய வீர்ர்கள் அனைவருக்கும் அர்ச்சனை நடந்து கொண்டிருந்த்து. நான் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன் ( வெளியே சிரித்தால் உரிச்சு தொங்க விட்டுடுவானுக,,,,) வலிய வந்து என்னிடம் – புது டீம், அதான் தோற்றுச்சு.. சேவாக் இல்ல , டோனி இல்ல அது இது என்று ஆயிரம் விளக்கங்கள். இதுக்கு நான் எதுவுமே கேட்க வில்லை. வேணாண்டா அழுதுடுவன் எங்கிற நிலையில் நான்..

இதோ இன்று, மாதக்கடைசி என்றால் எனது தலை உருளும். மேசையில் இருக்கும் கோப்புக்களினை பார்க்கும் போதே வயிறு கலக்கும். அதற்குள் மூழ்கிப்போயிருக்கும் போது, எனது இன்ரகொம் ஒலித்தது. திரையில் எனது இந்திய நண்பர்களில் ஒருவரின் எண் ஒளிர்ந்த்து.

“ஹலோ” இது நான்

“எப்படி இன்னை மேட்ச்?” என அவர் கேட்கும் போதே உற்சாகம் தெறித்த்து.

இலங்கை தோற்றுவிட்டது என்பது நண்பரின் உற்சாகக் கத்தலிலேயே புரிந்துவிட்டது. இந்தியா ஜெயித்தது என்பதை விட எதிரணி தோற்றுவிட்டது என்பதிலேயே அவர்கள் மகிழ்ச்சி அதிகம் இருப்பதை கண்டு வியந்துள்ளேன்.

“வாழ்த்துக்கள்” என்றேன். நண்பர் விடுவதாக இல்லை. போட்டு அறுத்துக்கொண்டே இருந்தார். கேட்டுக்கொண்டே இருந்தேன். 

வை பிளட் … சேம் பிளட் நிலமை….
ஏண்டா இப்பிடி இருக்கீங்க … விடுங்கடா டேய்….
வேறு என்னத்த சொல்ல….

( நண்பர்கள் இதை பாக்கமாட்டாங்க எங்கிற தைரியத்தில்தால் இதை பதிவேற்றுகின்றேன்.. ஏன்னா அவங்க ஒத்தரும் தமிழர்கள் இல்லை…. ஐ ஜாலி!!!!!)